கன்னி தெய்வ வசியம் - வசியம் செய்வது எப்படி
கன்னி தெய்வம் என்பது திருமணம் ஆகாமல் கன்னி கழியாமல் இறந்த கன்னி பெண்ணின் ஆத்மாவே கன்னி தெய்வமாகும். நம் குடும்பத்தில் இறந்த கன்னியின் பெயரை கேட்டு விபரம் அறிந்து கொள்ளவும். பின் ஓர் பிராமணரைக் கொண்டு அந்த ஆத்மாவிற்கு பிரேத தன்மை நீங்க பிரேத சாந்தி பூஜையும், தில ஹோமம், தில தர்பணம் செய்து அந்த கன்னி பெண் ஆத்மா பிரேத நிலை (பேய் நிலை) மாறி பித்ருவாக மாற இறைவனை வேண்டி மேற்படி பூஜைகளை செய்யவும்.
(குறிப்பாக பாபநாசம் தாமிர பரணி நதிக்கரையில் செய்வது சிறப்பு) பசுவிற்கு அகத்தி கீரை, வாழைப்பழம் கன்னி பெண்ணை நினைத்துத் தரவும். அந்த பசுவிற்கு உணவளித்த புண்ணியம் அந்த கன்னிக்கு சேரவேண்டும் என மனதார வேண்டவும்.
வாராகி அம்மன் மந்திரம் ஜெபித்தால் இவ்வளவு நன்மைகளா ?
இவைகளை செய்து முடித்துவிட்டு வியதிபாத யோக நாளில் இரவு 10 மணிக்கு தலை வாழை இலையில், உணவு வகைகள் மஞ்சள் சித்தாடை, பச்சை பட்டு துணி, பச்சை வளையல், மல்லிகைபூ மருதாணி விழுது, மருகொழுந்து செண்ட், ரிப்பன், சாந்து கட்டை சிப்பு, காதோலை கருகுமணி, தேங்காய் பழம், தாம்பூலம், வாசனை தூபம், தீபம் இவற்றுடன் வெட்ட வெளியில் வைத்து குலதெய்வம், இஷ்ட தெய்வம், கணபதி, குரு கிராம தேவதை இவர்களை மனதார பிரார்த்தித்து கன்னியின் ஆத்மாவை மனதார அழைக்கவும்.
கன்னியை தெய்வமாக வணங்குவதாகவும், தன்னையும், தன் குடும்பத்தையும் காக்கும் படியும், தனது வேண்டுதலை நிறைவேற்றி தரும்படியும், தனக்கு துணையாக எப்போதும் இருக்க வேண்டும் எனவும் மனதார பிரார்த்தித்து பின் வரும் மந்திரத்தை மனதால் சொல்லவும்.
''ஜிக்கான் கிக்கான் ராரா" என்று நிதானமாக மனதால் ஜபித்து வரவும். மனதில் ஓர் நம்பிக்கை, உடலில் ஓர் சிலிர்ப்பு ஏற்படும். பின்பு ஓர் கருமுட்டை, ஒரு எலுமிச்சம்பழம், ஒரு தேங்காய் பலியாக தரவும். பின் படையலை எடுத்துச் சென்று மயானத்தில் வைத்து விட்டு திரும்பி பாராமல் வரவும். பச்சை துணியால் வளையல், மருதாணி முதலிய சாமான்களை முடிந்து இலுப்பை அல்லது வேப்ப மரத்தில் கட்டி விடவும்.
மாந்திரீக பயிற்சி பெற கிளிக் செய்யவும் !
அந்த மரத்திற்கு மஞ்சள் பூசி குங்குமம் பொட்டிட்டு தினம் தீபம் போடவும். ஊதுபத்தி காட்டி வரவும். மூன்று தினங்களுக்குள் கனவில் தோன்றும். பத்து தினங்களுக்குள் தினம் கனவில் வர ஆரம்பிக்கும். பின் அந்த உருவத்தை மனதால் நினைத்து வணங்கி நமது கோரிக்கையை எண்ணி மரத்தில் பச்சை துணி மூட்டையின் முன்பு வாய்விட்டு பிரார்த்திக்கவும். பத்து தினங்களில் கோரிக்கை நிறைவேற வேண்டும் என வாக்கு கேளுங்கள். கௌலி பேசும்.
அந்த கோரிக்கை நிறைவேறியவுடன் படையல் போடவும். பிரதி வெள்ளிக்கிழமை மூன்று பச்சை வளையல் மருகொழுந்து சென்ட் மரத்தில் கட்டி செண்ட் தெளிக்கவும். நன்கு வேலை செய்யும். யாரிடமும் இந்த கன்னி தெய்வ வழிபாட்டு விபரம் சொல்லாதீர். பொறாமையால் கட்டு கட்டி நிறுத்தி விடுவார்கள். யாராவது விபரம் கேட்டால் குலதெய்வம், முத்துமாரியம்மன் என தெய்வத்தின் பெயரை சொல்லி விடுங்கள். விட்டு விடுவர்.
0 கருத்துகள்